யாழில் முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்
யாழில் தவறுதலாக உடையில் தீ பற்றியதில் காயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (2) உயிரிழந்தார்.
பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த 95 வயதுடைய மா.சின்னமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் கடந்த 26ஆம் திகதி அன்று சுருட்டு புகைப்பதற்கு பற்றவைத்த தீக்குச்சி தவறுதலாக அவர் அணிந்திருந்த ஆடையில் விழுந்து தீப்பற்றியதில் அவர் தீக்காயங்களுக்கு உள்ளானார்.
பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (2) மாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
யாழில் முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்
Reviewed by Vijithan
on
August 04, 2025
Rating:

No comments:
Post a Comment