மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் திரண்ட மக்கள்..
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 40 நாட்களைக் கடந்து கணியமண் அகழ்வு காற்றாலை திட்டத்திற்கு மன்னார் மக்களால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில்
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காற்றாலை திட்டம் மற்றும் மன்னாரில் இடம்பெறுகின்ற கணியமனல் அகழ்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்திருந்ததாக அறிய முடிகிறது முன்னெடுக்கப்படுகின்ற 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும் மன்னார் மாவட்டத்தில் எந்த இடத்திலும் கணிய மணல் அகழ்வு இடம்பெறக்கூடாது என்பதனை வலியுறுத்தியே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த ஆர்ப்பாட்டத்தை மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது...
Reviewed by Vijithan
on
September 19, 2025
Rating:







No comments:
Post a Comment