பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது
Reviewed by Vijithan
on
February 03, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 03, 2026
Rating:


No comments:
Post a Comment