பங்களாதேஷ் காவலில் இருந்த 6 இலங்கை மீனவர்கள் விடுதலை
பங்களாதேஷ் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் அரசாங்கம் வழங்கிய இந்த விடுதலையைத் தொடர்ந்து, குறித்த மீனவர்கள் குழுவினர் அடுத்த சில நாட்களில் நாட்டிற்கு வருகை தர உள்ளனர்.
இவர்கள் கடந்த ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் பங்களாதேஷ் கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு கடலோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து மேற்கொண்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் விளைவாக இவர்களை விடுவிக்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
April 01, 2026
Rating:


No comments:
Post a Comment