அண்மைய செய்திகள்

recent
-

வெசாக் தன்சல் நடத்த திட்டமா? - வௌியான முக்கிய அறிவிப்பு!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் வெசாக் தானசாலைகளைப் (தன்சல்) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இந்தத் தானசாலைகளுக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதன்படி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மிகவும் பாதுகாப்பான முறையில் உணவு வேளையைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு அதுதொடர்புடைய தரப்பினருக்குக் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

வெசாக் பௌர்ணமி தினத்திற்கான தானசாலைகளைப் பதிவு செய்யும் பணிகள் கடந்த 04 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





வெசாக் தன்சல் நடத்த திட்டமா? - வௌியான முக்கிய அறிவிப்பு! Reviewed by Vijithan on May 19, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.