அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பேருந்தில் சிக்கி ஆசிரியை பலி

 யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இன்று (18) காலை கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. 

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்தில் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பூனாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பேருந்தில் சிக்கி ஆசிரியை பலி Reviewed by Vijithan on June 18, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.