அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்ட ஹெலிகொப்டர்கள் நாட்டுக்கு
அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிகொப்டர்கள் தற்போது கடல் வழியாக நாட்டை வந்தடைந்துள்ளன.
இந்த புதிய விமானத் தொகுதியானது, இலங்கை விமானப்படையின் நீண்டகால செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்து, அதன் முழு விமானப்பிரிவை வலுப்படுத்துவதற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.
நாட்டை வந்தடைந்துள்ள ஹெலிகொப்டர்கள் தற்போது ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
தேவையான தொழில்நுட்ப சோதனைகளை முடித்த பின்னர், வரும் நாட்களில் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக அவை பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த விமானங்கள் மூலம் முதன்மையாக விமானிகளுக்கான பயிற்சிகள், அனர்த்த, தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்ட ஹெலிகொப்டர்கள் நாட்டுக்கு
Reviewed by Vijithan
on
June 02, 2026
Rating:
Reviewed by Vijithan
on
June 02, 2026
Rating:


No comments:
Post a Comment