அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சகவாழ்வு மன்றத்தினால் வளர்ப்பு ஆடுகள் கையளிப்பு-

[09-12-2010] மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வரிய குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மன்னார் சகவாழ்வு மன்றத்தினால்(க.உ.ந) வாழ்வாதார உதவியாக தெரிவு செய்யப்பட்ட ஒவ்வெரு குடும்பங்களுக்கும் 36 ஆயிரம் ரூபாய் பொருமதியுடைய 03 வளர்ப்பு ஆடுகள் மற்றும் கூடு அமைப்பதற்காண பொருட்கள் என்பன நேற்று புதன்கிழமை [8-12-2010] வளங்கப்பட்டதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் எப்.எம்.டியுட்டர் தெரிவித்தார்.



கடந்த யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட,கணவனை இழந்த,தொழில் வாய்ப்பில்லாத குடும்பங்களுக்கே மேற்படி உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையிலேயே கொட்டும் மழையில் நேற்று(08.12.10) தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



மன்னார் நிருபர் -[SRL]

மன்னார் சகவாழ்வு மன்றத்தினால் வளர்ப்பு ஆடுகள் கையளிப்பு- Reviewed by NEWMANNAR on November 04, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.