அடம்பன் தாழ்வு கிராமத்தில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 750 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை பாதிப்பு
மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் தாழ்வு கிராமத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக அக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட 750 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட 750ஏக்கர் நெற்பயிர்ச்செய்கையில் 400 ஏக்கர் நெற்பயிர் வெள்ளமை விளைந்து அறுவடை செய்யும் தருணத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தில் 120 குடும்பங்களைச்சேர்ந்த 394 பேர் வாழ்ந்து வரும் நிலையில் ஏற்பட்ட அணர்த்தத்தின் போது அணைவரும் இடம் பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை குறித்த கிராமத்தில் 80 வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒரு வீடு இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(மன்னார் நிருபர்)
பாதிக்கப்பட்ட 750ஏக்கர் நெற்பயிர்ச்செய்கையில் 400 ஏக்கர் நெற்பயிர் வெள்ளமை விளைந்து அறுவடை செய்யும் தருணத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தில் 120 குடும்பங்களைச்சேர்ந்த 394 பேர் வாழ்ந்து வரும் நிலையில் ஏற்பட்ட அணர்த்தத்தின் போது அணைவரும் இடம் பெயர்ந்துள்ளனர்.
இதேவேளை குறித்த கிராமத்தில் 80 வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒரு வீடு இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(மன்னார் நிருபர்)
அடம்பன் தாழ்வு கிராமத்தில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 750 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
February 12, 2011
Rating:
No comments:
Post a Comment