அண்மைய செய்திகள்

recent
-

போதைப்பொருள் கடத்துவதட்காவே காதலா??மன்னாரில் 77 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னாரில் 77 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வட இந்தியாவின் இராமநாதபுரம் பகுதியிலிருந்து படகு மூலம் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இந்தியர்களும் ஒரு இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

வடக்கு புலனாய்வுப் பிரிவினருக்கு இந்தியாவிலிருந்து கிடைக்கப் பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 750 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்ததாகவும், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நோக்கில் இவ்வாறு காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
போதைப்பொருள் கடத்துவதட்காவே காதலா??மன்னாரில் 77 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. Reviewed by NEWMANNAR on June 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.