மழை வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் தனியார் பேருந்து நிலையம் -பயணிகள் விசனம் ,திருத்தி அமைக்குமாறு கோரிக்கை.(பட இணைப்பு)
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிட வளாகம் மிகவும் மோசமடைந்த நிலையில் பாதிப்படைந்துள்ளதாகவும் இதனால் பயணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே மன்னார் நகர சபையும், மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கமும் உடனடியாக குறித்த பேரூந்து தரிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளை உடனடியாக திருத்தியமைத்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பில் பயணிகள் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னாரானது வடமாகாணத்தில் முக்கிய ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது.கடந்த 30 வருட யுத்த காலத்தின் போது மன்னாருக்குள் வர முடியாத தென் பகுதி மக்கள் தற்போது வந்து செல்லுகின்றனர். மன்னாரில் இருந்து நாட்டின் சகல பாகங்களுக்கும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெற்று வருகின்றது.
தற்போது நாட்டில் யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் மக்கள் சுற்றுலாப்பயணிகளாகவும்,வியாபார நடவடிக்கைகளுக்காகவும் மன்னாருக்கு வந்து செல்லுகின்றனர். இந்த நிலையில் அதிகளவான மக்கள் தனியார் பேரூந்துகளில் மன்னாருக்கு வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடம் உள்ளிட்ட அதன் வளாகத்தில் மழை நீர் தேங்கிய நிலையிலும்,அங்கு பரவப்பட்டுள்ள கிரவல் மண் மழை நீரில் கரைந்த நிலையில் உள்ளமையினாலும் அங்கு வரும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பல வருடங்களாக இந்த பிரச்சினை காணப்படுகின்ற போதும் மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கமும்,மன்னார் நகர சபையும் இவ்விடயத்தில் மௌனம் காத்து வருவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,,,,
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் நிலமையை கருத்தில் கொண்டு தற்போது வரை மன்னார் நகர சபை சுமார் 160 லோட் மண் கொட்டப்பட்டு பரவப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருகின்றமையினால் அதன் பணியினை தொடர முடியவில்லை.இன்னும் சில தினங்களில் அதன் இறுதிப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் பயணிகள் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னாரானது வடமாகாணத்தில் முக்கிய ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது.கடந்த 30 வருட யுத்த காலத்தின் போது மன்னாருக்குள் வர முடியாத தென் பகுதி மக்கள் தற்போது வந்து செல்லுகின்றனர். மன்னாரில் இருந்து நாட்டின் சகல பாகங்களுக்கும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெற்று வருகின்றது.
தற்போது நாட்டில் யுத்தம் ஓய்ந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் மக்கள் சுற்றுலாப்பயணிகளாகவும்,வியாபார நடவடிக்கைகளுக்காகவும் மன்னாருக்கு வந்து செல்லுகின்றனர். இந்த நிலையில் அதிகளவான மக்கள் தனியார் பேரூந்துகளில் மன்னாருக்கு வருகின்றனர். இந்த நிலையில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடம் உள்ளிட்ட அதன் வளாகத்தில் மழை நீர் தேங்கிய நிலையிலும்,அங்கு பரவப்பட்டுள்ள கிரவல் மண் மழை நீரில் கரைந்த நிலையில் உள்ளமையினாலும் அங்கு வரும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பல வருடங்களாக இந்த பிரச்சினை காணப்படுகின்ற போதும் மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கமும்,மன்னார் நகர சபையும் இவ்விடயத்தில் மௌனம் காத்து வருவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவிக்கையில்,,,,
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் நிலமையை கருத்தில் கொண்டு தற்போது வரை மன்னார் நகர சபை சுமார் 160 லோட் மண் கொட்டப்பட்டு பரவப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருகின்றமையினால் அதன் பணியினை தொடர முடியவில்லை.இன்னும் சில தினங்களில் அதன் இறுதிப்பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
மழை வெள்ளத்தில் மிதக்கும் மன்னார் தனியார் பேருந்து நிலையம் -பயணிகள் விசனம் ,திருத்தி அமைக்குமாறு கோரிக்கை.(பட இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
October 30, 2012
Rating:
No comments:
Post a Comment