அண்மைய செய்திகள்

recent
-

மன்-ஆண்டாங்குளம் பாடசாலையின் பிராதான நுழைவாயில் திறப்பு விழா


மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்-ஆண்டாங்குளம் பாடசாலையின் பிராதான நுழைவாயில் அப்பாடசாலையின் பழைய மாணவன் தேசமான்ய அல்ஹாச் சீ.எம்.எம். யாசீன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து கட்டப்பட்ட நிலையில் குறித்த நுழைவாயில் வைபவ ரீதியாக திறப்பு விழா செய்யும் நிகழ்வு நேற்று புதன் கிழமை காலை பாடசாலையில் இடம் பெற்றது.


-அப்பாடசாலையின் அதிபர் ஜீ.அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் மடு வலயக்கல்விப்பனிப்பாளர் ஏ.ஜே.குரூஸ் அவர்களின் அணுமதியுடன் அப்பாடசாலையின் பழைய மாணவன் தேசமான்ய அல்ஹாச் சீ.எம்.எம். யாசீன் அவர்களின் சொந்த நிதியில் இருந்து அமைக்கப்பட்ட குறித்த நுழைவாயிலினை அப்பாடசாலையின் முன்னால் அதிபர் ஏ.அந்தோனிப்பிள்ளை அவர்களினாலும், பழைய மாணவன் தேசமான்ய அல்ஹாச் சீ.எம்.எம். யாசீன் அவர்களினாலும் நேற்று புதன் கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.





இதன் போது மடு வலயக்கல்விப்பனிப்பாளர் ஏ.ஜே.குரூஸ் உற்பட பலர் கலந்து கொண்டனர்.குறித்த பழைய மாணவனான தேசமான்ய அல்ஹாச் சீ.எம்.எம். யாசீன் அவர்கள் தான் கல்வி கற்ற இந்த தமிழ் பாடசாலைக்கும்,ஆண்டான்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கும் அவரது சொந்தப்பணத்தினை ஒதுக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
மன்-ஆண்டாங்குளம் பாடசாலையின் பிராதான நுழைவாயில் திறப்பு விழா Reviewed by NEWMANNAR on October 11, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.