பேசாலை பகுதியில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட டோலர் படகு மீட்பு-பட இணைப்பு
கடந்த திங்கட்கிழமை முதல் மன்னாரில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (30-10-2012) அதிகாலை ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக மன்னார் பேசாலை கடற்கரையில் நங்கூறமிடப்பட்டிருந்த பெருமதி வாய்ந்த டோலர் படகு ஒன்று அலையில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வௌ;வாய்க்கிழமை(30-10-2012) பேசாலை பகுதியில் உள்ள நூற்றுக்கணக்காண மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் ஒன்று சேர்ந்து பாரீய போராட்டத்தின் மத்தியில் குறித்த படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் பேசாலை பகுதியில் உள்ள மீனவர்கள் தமது மீன்பிடி படகுகளை பாதுகாப்புக்கருதி மன்னார் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.
பேசாலை பகுதியில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட டோலர் படகு மீட்பு-பட இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
October 31, 2012
Rating:
No comments:
Post a Comment