அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெயர்ந்த மக்களுக்கு த.தே.கூட்டமைப்பு உதவி

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்டு மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள இடைத்தங்கல்  முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்துள்ளது.


 மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட 06 இடைத்தங்கல் முகாம்களுக்கு இவ்வாறு பொருட்கள் முதற்கட்டமாக கையளிக்கப்பட்டுள்ளது.

 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவர் வி.எஸ்.சிவகரன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உப தலைவர் சீ.சௌந்தர நாயகம் ஆகியோர் குறித்த பொருட்களை வழங்கி வைத்தனர்.






மன்னாரில் இடம் பெயர்ந்த மக்களுக்கு த.தே.கூட்டமைப்பு உதவி Reviewed by NEWMANNAR on December 31, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.