அண்மைய செய்திகள்

recent
-

காலநிலை மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் பகுதியாக வட மாகாணம்

காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாட்டின் பல பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இதன்படி வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களும், அம்பாந்தோட்டை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதென பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பி.வி.ஆர்.புண்ணியவர்தன தெரிவித்துள்ளார்.


 இவ்வாறான பாதிப்புக்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சின் விசேட குழுவொன்று ஆராயவுள்ளது.

 விவசாய, சுகாதார, சுற்றாடல், எரிசக்தி போன்ற பல்வேறு துறைகள் ஊடாக காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய முறைகள் கண்டறியப்படுமென கலாநிதி புண்ணியவர்தன குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் பகுதியாக வட மாகாணம் Reviewed by NEWMANNAR on January 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.