மன்னாரில் முன்னால் போராளிகளுக்கு கடனுதவித்திட்டம்.(படங்கள் )
புனர்வாழ்வு பெற்ற மன்னார்,வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னால் போராளிகள் 164 பேருக்கு சுய தொழிலை பெற்றுக்கொள்ளுவதற்காக வங்கியினுடாக கடனுதவிகள் வழங்குவதற்கான நிகழ்வு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினுடாக இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திர சிரி கஜதீர,புனர்வாழ்வு அமைச்சின் தலைவர் இ.ஏ.அமரசிங்க,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மேலதிக அரசாங்க அதிபர்,உதவி அரச அதிபர்கள்,அமைச்சர் றிஸாட் பதீயுதீனின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 164 முன்னால் போராளிகளுக்கு சுயதொழிலை மேற்கொள்ளுவதற்கான கடனுதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னாரில் முன்னால் போராளிகளுக்கு கடனுதவித்திட்டம்.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
January 15, 2013
Rating:
No comments:
Post a Comment