மன்னார் மாவட்ட உதைப்பத்தாட்ட லீக்கின் செயற்பாடுகள் தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது-புதிய தலைவர்
கடந்த பல மாதங்களாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்பட்ட மன்னார் மாவட்ட உதைப்பத்தாட்ட லீக்கின் செயற்பாடுகள் தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக மன்னார் மாவட்ட உதைப்பத்தாட்ட லீக்கின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏ.ஜெராட் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட காலமாக மன்னாரில் ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்பட்ட மன்னார் மாவட்ட உதைப்பத்தாட்ட லீக்கின் செயற்பாடுகள் குறித்து கடந்த 24 ஆம் திகதி (24-02-2013) விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது புதிய நிர்வாக தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது மன்னார் மாவட்ட உதைப்பத்தாட்ட லீக்கின் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்குத்திரும்பியுள்ளதாக மன்னார் மாவட்டத்தில் உள்ள உதைப்பந்தாட்ட கழகங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதன் போது புதிய தலைவராக ஏ.ஜெராட்,செயலாளராக புகழ்,பொருளாளராக கோல்டன்,உப தலைவராக ஒஸ்மன்,உப செயலாளராக ஜெகதீஸ் மற்றும் போசகர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட உதைப்பத்தாட்ட லீக்கின் செயற்பாடுகள் தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது-புதிய தலைவர்
Reviewed by NEWMANNAR
on
February 28, 2013
Rating:
No comments:
Post a Comment