அண்மைய செய்திகள்

recent
-

தொடர்ச்சியான மழையினால் மன்னார்-முசலி விவசாயிகள் அவதி

முசலி பிரதேச விவசாயிகள் தமது வயலில் அறுவடை செய்த நெல்லையும் இன்னும் அறுவடை செய்யாத நெல்லையும் விற்கமுடியாமல் இருக்கிறார்கள் தொடர்ச்சியாக பெய்கின்ற மழையினால் வெயிலில் உலர வைக்கமுடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.


கடந்த முறை தொடரச்சியாக பெய்த மழையினால் முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான வயல் வெள்ளத்தினால் அழிவடைந்தன சில விவசாய அமைப்புகள் இன்னும் நிவாரணம் பெறவில்லை முருங்கன்-சிலாவத்துறை பிரதான வீதியில் உள்ள பீ.பீ. பொற்கேனியில் கமநல சேவை திணைக்களத்திற்கு தேவையினை விட அதிகமான உழவு இயந்திரங்கள் இருக்கின்றன இதனால் முசலி விவசாயிகளுக்கு எந்த விதமான பயனும் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்தது போன்று அறுவடை இயந்திரங்களை கொள்வனவு செய்யப்பட்டிருந்தால் அதிகமான அறுவடை செய்யப்பட்டிருக்கும் என விவசாய அமைப்பின் தலைவர்கள் தெரிவிக்கின்றார்.

விவசாயிகளின் கவலை எப்போது தீரும்

Shm Wajith

தொடர்ச்சியான மழையினால் மன்னார்-முசலி விவசாயிகள் அவதி Reviewed by Admin on March 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.