அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தந்தை செல்வா பிறந்த தின நிகழ்வு


ஈழத்து காந்தி என்றழைக்கப்படும்  அமரர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 115 ஆவது பிறந்த தின விழா எதிர்வரும் 1 ஆம் திகதி (1-04-2013) மன்னாரில் கொண்டாடப்படவுள்ளதாக தந்தை செல்வா அறம் காவலர் அமைப்பின் தலைவர் பேதுரு அந்தோனி மார்க் தெரிவித்தார்.

எதிர்வரும் 1 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைந்திருக்கும் தந்தை செல்வா திருவுருவச்சிலைக்கு முன் குறித்த நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.

இதன் போது அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து  சிறப்புரைகளும்,சமயத்தலைவர்களின் ஆசியுரைகளும் இடம்பெறவுள்ளதாக தந்தை செல்வா அறம்காவலர் அமைப்பின் தலைவர் பேதுரு அந்தோனி மார்க் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் தந்தை செல்வா பிறந்த தின நிகழ்வு Reviewed by Admin on March 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.