‘இ.நமசிவாயம் - அவரது வாழ்க்கையும் காலமும் அவரது திருக்கேதீச்சர புணருத்தாரன திருப்பணியும்’ நூல் வெளியீட்டு விழா
பேராசிரியர் சி.பத்மநாதன் எழுதி எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன்
லிமிட்டெட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘இ.நமசிவாயம் - அவரது வாழ்க்கையும் காலமும் திருக்கேதீச்சர புணருத்தாரன திருப்பணியும்’ நூல் வெளியீட்டு விழா திருக்கேதீச்சர ஆலய வசந்த மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு நூலாசிரியரான பேராசிரியர் சி.பத்மநாதன், கலாநிதி மரவன்புலவு சச்சிதானந்தம், புலவர் திருநாவுக்கரசு, பொலிகண்டி கந்தவனம், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டிருந்தனர்.
‘இ.நமசிவாயம் - அவரது வாழ்க்கையும் காலமும் அவரது திருக்கேதீச்சர புணருத்தாரன திருப்பணியும்’ நூல் வெளியீட்டு விழா
Reviewed by NEWMANNAR
on
April 22, 2013
Rating:
No comments:
Post a Comment