அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கீரி கிராம மக்களுக்கும் செல்வம் எம்.பிக்கும் இடையில் விசேட சந்திப்பு

மன்னார் கீரி கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும்,அதற்கான  தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் கீரி கிராம மக்களுக்கும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.


கீரி பொது மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த சந்திப்பில் அக்கிராமத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கிராமத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார பிரச்சினை,வீதிகள் புனரமைப்புச் செய்யப்படாமை,கீரி கிராமத்திற்கு நிரந்தரமான ஒரு கிராம சேவையாளர் இல்லாமை மற்றும் கீரி கிராமத்திற்கான  எல்லைப்பிரச்சினை ஆகியவை காணப்படுவதாக அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

இதே வேளை  குறித்த கீரி கிராமம் தற்போது வரை மன்னார் நகர சபைக்குற்பட்டதாக    காணப்படுகின்ற போதும் மன்னார் நகர சபைக்குற்பட்ட கிராமங்களில் அவர்கள் செய்கின்ற பொதுவான வேலைத்திட்டங்களை  அவர்கள் இந்த கீரி கிராமத்திற்கு செய்வதில்லை என அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முறையிட்டனர்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும்,மின்சாரத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.



மன்னார் கீரி கிராம மக்களுக்கும் செல்வம் எம்.பிக்கும் இடையில் விசேட சந்திப்பு Reviewed by NEWMANNAR on May 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.