அண்மைய செய்திகள்

recent
-

விடத்தல்தீவில் சுழற்காற்று-10 வீடுகள் சேதம்.


மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் இன்று திங்கட்கிழமை காலை வீசிய சுழற்காற்றினால் 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.


இன்று காலை கடும் மழை பெய்து கொண்டிருந்த போது காலை 8.45 மணியளவில் விடத்தல் தீவு கிராமத்தில் சுமார் மூன்று நிமிடங்கள் வரை சுழற்காற்று வீசியுள்ளது.


இதன் போது குறித்த கிராமத்தில் உள்ள 10 வீடுகள் சேதமாகியுள்ளது.வீட்டு கூரைகள் சுழற்காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

பல வீடுகளின் ஓடுகள் உட்பட பல பாகங்கள் கற்றினால் உடைந்து நொருங்கியுள்ளது.

மின்கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளது.இந்த நிலையில் குறித்த பாதிப்புக்கள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,டெலோ இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.







விடத்தல்தீவில் சுழற்காற்று-10 வீடுகள் சேதம். Reviewed by Admin on May 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.