அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாதனையாளர்கள் கௌரவிப்பு(படங்கள் )

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட 25 ஆவது சிறிலங்கா இளைஞர் விளையாட்டு விழா கடந்த 26ம் திகதி பொலநருவையில் இடம் பெற்ற போது மன்னார் மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட பனங்கட்டுக்கொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகம் தேசிய மட்டத்தில் 1 ஆம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

-குறித்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை மன்னார் நகர நுழைவாயிலில் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்றது.இதன் போது குறித்த கழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களும் கௌவிக்கப்பட்டு பவனியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

-மன்னார் நுழை வாயிலில் இருந்து ஊர்வலமாக மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் சென்றனர்.இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரியா,உதவி அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல் மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் குறித்த வீரர்களை கௌரவித்தனர்.பின் மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக சென்று மன்னார் பனங்கட்டுக்கொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தினை சென்றடைந்தனர்.இதனைத் தொடர்ந்து அங்கு நிகழ்வுகளும் இடம் பெற்றது.குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

(மன்னார் நிருபர்) 
(29-07-2013)








மன்னார் சாதனையாளர்கள் கௌரவிப்பு(படங்கள் ) Reviewed by NEWMANNAR on July 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.