அண்மைய செய்திகள்

recent
-

தேசிய மட்டத்தில் வெற்றி வாகை சூடிய மன்-நானாட்டான் மகா வித்தியாலயம்.- படங்கள்

2013 ம் ஆண்டிற்கான தேசிய மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் ஒக்டோபர் முதலாம் வாரத்தில் நடைபெற்றது. 

இப் போட்டியில் மன்னார் மாவட்டத்திற்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கப் பெற்றது. 

அவ்விடம் மன்-நானாட்டான் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் செல்வன் ச.அன்று டிலக்சன் பெற்றுள்ளார்.

இவர் 21 வயது ஆண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் 1.98 மீற்றர் பாய்ந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் அதே பாடசாலையை சேர்ந்த மாணவன் செல்வன்.கொ.நெவில்ராஜ், இவர் 19 வயது ஆண்களுக்கான நீளம்  பாய்தலில் 7ம் இடத்தையும் பெற்றனர்.

அந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்கும்; நிகழ்வு நேற்று பாடசாலையில்; இடம் பெற்றது.

இவ் வெற்றிக்கு காரணமாக இருந்த பாடசாலை அதிபர் அருட்சகோ.ச.இ.றெஜினோல்ட் அவர்களையும் அம் மாணவர்களின் உடற்கல்வி ஆசிரியரும், பயிற்றுவிப்பாளருமான திருஎஸ்.சிறிதேவகரன் அவர்களையும், உடற்கல்வி ஆசிரியர் திருமதி.ஜெ.தேவராசா(றூபா) அவர்களையும், ஆரம்ப பயிற்றுவிப்பாளர் திரு.வி.ஏ.சி.பெனாண்டோ அவர்களையும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். 




தேசிய மட்டத்தில் வெற்றி வாகை சூடிய மன்-நானாட்டான் மகா வித்தியாலயம்.- படங்கள் Reviewed by Admin on October 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.