சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஆசிரியா் தின நிகழ்வுகள் - 2013
மன்.இலகடிப்பிட்டி றோ.க.த.க பாடசாலையினுடைய ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் (07.10.2013) பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.பி.தனேஸ்வரன் (ஆசிரிய ஆலோசகர், ஆலோசனையும் வழிகாட்டலும்) அவர்களும் சிறப்பு விருந்தினராக அருட்பணி. பிரான்சிஸ் மெரி டி கோல் ( பங்குத்தந்தை, உயிலங்குளம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக பாடசாலையில் நடைபெற்ற நன்றித் திருப்பலியைத் தொடர்ந்து விருந்தினா்களும் விழாவின் நாயகர்களான ஆசிரியர்களும் பாண்ட் வாத்திய சகிதம் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டனா்.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், வரவேற்புரை , ஆசிரியா் கீதம், ஆசிரியர் உறுதி மொழி என்பவற்றுடன் மாணவர்களுடைய இசை, நடன, நாடக நிகழ்வுகளும் சிறப்பான முறையில் இடம்பெற்றன.இந் நிகழ்வில் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள், பா.அ.சங்கத்தினா் என பலரும் கலந்து ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஆசிரியா் தின நிகழ்வுகள் - 2013
Reviewed by மன்னார் மன்னன்
on
October 08, 2013
Rating:
No comments:
Post a Comment