மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் 2 ஆவது நாளாகவும் இன்று ஸ்தம்பிதம்-அரச பஸ்கள் மேலதிகமாக சேவையில்-Photos
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிகள் சேவையில் ஈடுபடும் மன்னார் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்திற்கு செந்தமான பேரூந்துகள் நேற்று வெள்ளிக்கிழமை(27) மேற்கொண்ட பணிப்பகிஸ்கரிப்பு இன்று சனிக்கிழமை(28) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபட புதிதாக அனுமதிப்பத்திரம் வழங்கியதன் காரணத்தினாலேயே குறித்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,அனுமதிப்பத்திரம் வழங்கியதில் முறைக்கேடுகள் காணப்படுவதாகவும் தெரிவித்து மன்னார் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் 13 தனியார் பேரூந்துகளின் உரிமையாளர்கலே பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பின் போது நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை அவர்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை(28) காலை முதல் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.
இதனால் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான வீதியூடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
தனியார் பேரூந்து உரிமையாளர் ஒருவர் இலாப நோக்குடன் பல தடவைகள் தனது போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை அடிக்கடி மாற்றி சேவையில் ஈடுபடுவதினால் ஏனைய மன்னார்-யாழ் சேவையில் ஈடுபடும் பேரூந்து உரிமையாளர்கள் பாதீக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே குறித்த செயற்பாடுகளை கண்டித்தும்,அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யவும் கோரியும் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பிற்கு இது வரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என மன்னார்தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க மன்னார் தனியார் போருந்து உரிமையாளர் சங்கத்துடன் உரிய முறையில் கலந்துரையாடாது இன்று(28) மதியம் முதல் அரச பேரூந்துகளை அதிக அளவில் யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபட வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் பணிப்புரை விடுத்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் என மன்னார் தனியார் போருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உரிய முடிவு கிடைக்காது விட்டால் மன்னார் மாவட்ட ரீதியில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் தனியார் போருந்து உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் 2 ஆவது நாளாகவும் இன்று ஸ்தம்பிதம்-அரச பஸ்கள் மேலதிகமாக சேவையில்-Photos
Reviewed by NEWMANNAR
on
February 28, 2015
Rating:
No comments:
Post a Comment