அண்மைய செய்திகள்

recent
-

தனிப்பட்ட தேவைகளுக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ ஒரு சமூகத்தை பாழாக்கி விட முடியாது-அமைச்சர் றிஸாட் பதியுதீன்.

மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் நான் மக்கள் பணி செய்வதற்காக கேட்ட உதவிகளையெல்லாம் தந்த போதும் சமூகத்தின் நன்மை கருதியே மஹிந்த ராஜபக்ஸவின் அரசிலிருந்து தமது கட்சி வெளியேறியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று சனிக்கிழமை (2) இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,

மஹிந்த அரசிலிருந்து வெளியேறுவதற்கு தாங்கள் எடுத்த துணிச்சலான முடிவின் காரணமாகவே அந்த அரசிலிருந்த கட்சிகளும், அமைச்சர்களும், எம்பிக்களும் அடுத்தடுத்து வெளியேறி மஹிந்த அரசை உருக்குலைய வைத்துள்ளது.

எருக்கலம்பிட்டி கிராமம் பல்வேறு வரலாற்று சிறப்புக்களை கொண்டுள்ளது. இந்த கிராமத்தில் பிறந்தவர்களும் இங்கே படித்தவர்களும் இன்று இலங்கையிலும், சர்வதேசத்திலும் கொடிகட்டி பறக்கின்றனர்.

நான் இந்தக் கிராமத்தின் அயல் கிராமமான தாராபுரத்தில் பிறந்த போதும் இந்தக்கிராமத்தின் மீதும் அன்பும் அபிமானமும் கொண்டவன்.

என்னிடத்தில் பிரதேசவாதமோ, ஊர்வாதமோ கிடையாது. இந்த கிராமத்திலுள்ள மக்கள் உதவிகள் கேட்ட போதெல்லாம் எந்;தவித பேதமும் பாராது என்னால் முடிந்தவரை உதவியுள்ளேன்.

பதவியை கொடுப்பவன் இறைவனே. அதை எந்த ஒரு தனி மனிதனாலோ குழுக்களாலோ பறித்தெடுக்க முடியாது.

ஏழைக்குடும்பத்தில் பிறந்த எனக்கு அல்லாஹ் இந்த உயரிய பதவியை வழங்கியுள்ளான். அதனை இறைவனுக்கு பொருத்தமான முறையில் அமானிதமாக பயன்படுத்தி வருகின்றேன்.

வாக்குகளை வசீகரிப்பதற்காகவோ அல்லது எனது சொந்த தேவைக்காகவோ நான் இந்தக் கிராமத்திற்கு வரவில். எனது 14 வருட கால அரசியல் வாழ்வில் இந்தக் கிராமத்திற்கும் பணியாற்ற வேண்டும் என்று என் மனச்சாட்சியை தொட்டுக் கேட்டவனாகவே நான் உங்கள் முன்னிலையில் வந்துள்ளேன்.

நமது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ சுயநல வேட்ககைகளுக்காகவோ ஒரு சமூகத்தை பாழாக்கிவிட முடியாது. இன்று இங்கு வந்த பின்னரே பல்வேறு பிரச்சினைகளை என்னால் நேரடியாக காணமுடிகின்றது.

புதிய வீடமைப்புத்திட்டத்தின் அருகே உள்ள பாலத்தையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.

எருக்கலம்பிட்டி கிராம மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனது கடந்த கால வெற்றியில் பங்களிப்பை நல்கியுள்ளார்கள். இதனை நான் ஒருபோதும் மறந்துவிட முடியாது.என தெரிவித்தார்.
தனிப்பட்ட தேவைகளுக்காகவோ அல்லது சுயநலத்திற்காகவோ ஒரு சமூகத்தை பாழாக்கி விட முடியாது-அமைச்சர் றிஸாட் பதியுதீன். Reviewed by NEWMANNAR on May 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.