அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து விசேடகூட்டம்-Photos
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் மன்னார் ஆஹால் விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(14) காலை விசேட கூட்டம் இடம் பெற்றது.
-வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கூட்டத்தின் போது எதிர் வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நேகராதலிங்கம்,வேட்பாளர் பெருமாள் செல்லத்துறை ஆகிய மூன்று வேட்பாளர்களையும் ஆதரித்தே குறித்த விசேட கூட்டம் இடம் பெற்றது.
-இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன்,கவிஞர் மாணிக்கம் ஜெகன்,மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
-இதன் போது வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் வேட்பாளர் பெருமாள் செல்லத்துறை ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
-இதன் போது பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கிராம மக்கள்,ஆதரவாளர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து விசேடகூட்டம்-Photos
Reviewed by Admin
on
July 14, 2015
Rating:
No comments:
Post a Comment