அண்மைய செய்திகள்

recent
-

வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 10அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் கையளிப்பு

வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 10 அம்சக் கோரிக்கைகளை வடமாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மக்கள் பிரதிநிதிகளிடம் இன்று  கையளித்தது.

வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற வடமாகாண மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வின் போதே இது கையளிக்கப்பட்டது.

போர் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்த நிலையிலும் வடபகுதி மீனவர்கள் பல பிரச்சினைகளை முகங்கொடுத்து வருகின்றனர். அவ்வகையில், சட்டவிரோத மீன்பிடி முறை, இந்திய மீனவர்களின் ஊடுருவல், பருவகால மாற்றங்களின் போது தென்பகுதி மீனவர்களின் வருகை, கடற்படை மீனவர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்தல் மற்றும் அச்சுறுத்துதல், மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகள், மீனவருக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 விடயங்களை உள்ளடக்கிய மகஜரே மக்கள் பிரதிநிதிகளிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இவ்விடயங்களை நாடாளுமன்றத்திலும், வடமாகாண சபையிலும் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இம்மகஜர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக 10அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் கையளிப்பு Reviewed by NEWMANNAR on October 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.