தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. Photos
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
படகு ஒன்றில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.அவர்களில் ஜீவன் பிரைசர்(வயது-15) உடைய சிறுவனும் அடங்குகின்றான்.
கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட குறித்த 06 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதன் போது குறித்த மீனவர்களை இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின் இன்று(1) ஞாயிற்றுக்கிழமை மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் வயது குறைந்த ஜீவன் பிரைசர்(வயது-15) என்ற சிறுவனை மன்னார் சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கமாறு மன்னார் பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதே வேளை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த இரு தடவைகள் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. Photos
Reviewed by NEWMANNAR
on
November 02, 2015
Rating:
No comments:
Post a Comment