அண்மைய செய்திகள்

recent
-

நடுக்குடா முன்பள்ளிக்கு ஒரு தொகுதி பொருட்களை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன்.(படம்)

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நடுக்குடா முன்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த முன்பள்ளியில் குடி நீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில்   ஒரு தொகுதி பொருட்களை வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று புதன் கிழமை மாலை நடுக்குடா மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினூடாக கையளித்தார்.

நடுக்கடா முன்பள்ளிக்கு குடி நீர் வசதியை பெற்றுத்தருமாறு கோரி அப்பாடசாலை நிர்வாகம் நடுக்குடா மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினூடாக  வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஜீ.குணசீலனிடம் கோரிக்கையை முன் வைத்தனர்.

இந்த நிலையில் வடாகாண சபை உறுப்பினர் தனது ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நீர்த்தாங்கி மற்றும் குடி நீர் இணைப்பை பெற்றுக்கொள்ளுவதற்காக பொருட்களையும் இன்று புதன் கிழமை மாலை நடுக்குடா மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தினூடாக கையளித்தார்.

இதே வேளை தலைமன்னார் ஸ்ரேஸன் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கும் தனது நிதி ஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தொகுதி சமையல் உபகரணங்களையும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று புதன் கிழமை மாலை தலைமன்னார் ஸ்ரேஸன் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திடம் கையளித்தார்.



(மன்னார் நிருபர்)

(17-2-2016)






நடுக்குடா முன்பள்ளிக்கு ஒரு தொகுதி பொருட்களை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன்.(படம்) Reviewed by NEWMANNAR on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.