அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நுகர்வோருக்கு மீதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்களை வழங்கும் வர்த்தகர்கள்

மன்னாரில் நுகர்வோருக்கு மீதிப்பணத்திற்கு பதிலாக இனிப்புக்கள் மற்றும் வேறு பொருட்களை வழங்குவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பில் வர்த்தகர்கள் தெரிவிக்கையில் மீதி பணம் வழங்குவதில் நாணயக் குற்றிகளின்  தட்டுப்பாடு நீண்டகாலமாக நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் நுகர்வோருக்கு மீதிப்பணம் வழங்குவது வர்த்தகர்களின் பொறுப்பாகும். 
இருப்பினும் வர்த்தகர்கள் உரிய சில்லறை நாணயங்கள் தேவைப்படுமிடத்து வங்கிகளில் பெற்று இப் பிரச்சினையினை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் இது தொடர்பாக உரியவர்களிடம் முறையிட்டு சில்லறை நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு உரிய நட்டவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலம் வர்த்தகர்கள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களில் இருந்து விடுபடமுடியும்.


மன்னாரில் நுகர்வோருக்கு மீதி பணத்திற்கு பதிலாக இனிப்புக்களை வழங்கும் வர்த்தகர்கள் Reviewed by NEWMANNAR on March 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.