அண்மைய செய்திகள்

recent
-

மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு.(படம்)

யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தனது நிதி ஒதுக்கீட்டில் இருந்து பல்வேறு உதவித்திட்டங்களை நேற்று வழங்கி வைத்துள்ளார்.


இந்த வகையில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு தொகுதி கதிரைகளையும்,

முள்ளிக்குளம் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒரு தொகுதி கதிரைகளைகள் மற்றும் குத்து விளக்கு தொகுதிகளையும்,

சின்ன வலயன் கட்டு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு சமையல் பாத்திர தொகுதிகளையும்,விளாத்திக்குளம் மாதர்,கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒலி பெருக்கித்தொகுதி,பூசாரிக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒரு தொகுதி கதிரைகள்,

இரணை இலுப்பைக்கடவை மாதர் கிரா அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு தொகுதி கதிரைகள்,

கல் மடு மாதர்,கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு தொகுதி கதிரைகள் போன்றவற்றை வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் நிருபர்-

(2-05-2016)










மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on May 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.