அண்மைய செய்திகள்

recent
-

சபாநாயகர்,எதிர்கட்சித்தலைவர் உள்ளிட்ட குழுவினர் மன்னார் விஜயம்- 'அடைக்கலம் அமிர்தநாதனுக்கு' இறுதி அஞ்சலி-(படம்)

மன்னாருக்கு இன்று புதன் கிழமை காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சபாநாயகர் கரு ஜெயசூரிய,எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான சித்த வைத்தியர் அடைக்கலம் அமிர்தநாதன் தனது 83 ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(4) மாலை காலமானார்.

அன்னாரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் உள்ள அன்னாரில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று (7) புதன் கிழமை காலை விசேட வானூர்தி மூலம் மன்னாருக்கு வருகை தந்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இவர்களுடன் நிதி அமைச்சர் ரவி கருநானாயக்க, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஊடக அமைச்சர் கயந்த கருனாதிலக்க உற்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், ஜோகேஸ்வரன்,வியாலேந்திரன் ஆகியோரும் வடக்கு மாகாணசபை மற்றும் கிழக்கு மாகணசபைகளின் உறுப்பினர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


-மன்னார் நிருபர்-
(7-12-2016)
















சபாநாயகர்,எதிர்கட்சித்தலைவர் உள்ளிட்ட குழுவினர் மன்னார் விஜயம்- 'அடைக்கலம் அமிர்தநாதனுக்கு' இறுதி அஞ்சலி-(படம்) Reviewed by NEWMANNAR on December 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.