மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் விசேட கலந்துரையாடல்.(படம்)
மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இன்று புதன் கிழமை காலை தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் மன்னார் சர்வோதையத்தில் இடம் பெற்றது.
மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வோதையம், சேவலங்கா, ஆர்.பி.ஆர். அரச சார்பற்ற ஸ்தாபனங்களின் ஒன்றியம் ஆகியவை இணைந்து குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது மன்னார்,நாணாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி கிராம மட்ட தலைவர்கள்,மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மதத்தலைவர்கள் என குறிப்பிட்ட அளவிலானோர் தெரிவு செய்யப்பட்டு தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மார்ச் 12 பிரகடனத்தில் கைச்சாத்திட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் தொடர்பிலும் குறிப்பாக தேர்தல் ஒன்று இடம் பெறுகின்ற போது மக்களின் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.மேலும் புதிய உள்ளுராட்சி மன்றத்தேர்தல் முறைமையுடன் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை கட்டியொழுப்புவது தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-
மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் விசேட கலந்துரையாடல்.(படம்)
Reviewed by Author
on
February 15, 2017
Rating:
No comments:
Post a Comment