மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ள கடலட்டை இனப்பெருக்க கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைப்பு-Photos
மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ள 'கடலட்டை இனப்பெருக்க கட்டிடத்தொகுதி'க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடல் தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று சனிக்கிழமை காலை வைபவ ரீதியாக இடம் பெற்றது.
இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமர்,ஐக்கிய தேசியக்கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஏ.சமீயு முஹம்மது பஸ்மி ஆகியோரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
-கடற்தொழில் நீரியல் வழங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினச் செய்கை அதிகார சபையின் கீழ் 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த கடலட்டை இனப்பெருக்க கட்டிடத்தொகு மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஓலைத்தொடுவாய் பகுதியில் அமைப்பதற்கு வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த நிகழ்வில் மீனவ சங்க பிரதி நிதிகள்,திணைக்கள தலைவர்கள்,உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ள கடலட்டை இனப்பெருக்க கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
February 25, 2017
Rating:
No comments:
Post a Comment