“கிறிஸ்தவர்களின் தமிழ்க் கொடை - தமிழியற் சான்றோர் - பகுதி 2-3” என்ற நூல்வெளியீடு---அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார்...படங்கள் இணைப்பு
அறிமுகப்படுத்தியதில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பு மேலானதாகும்
அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்மகேந்திரராசா என்ற இயற்பெயரைக் கொண்ட நா. வை. குமரி வேந்தன் அவர்கள் தமிழ் மேல் கொண்ட தீராக் காதலால் தன் பெயரைத் தனித்தமிழில் அமைத்துக்கொண்டுள்ளார். தனது 55வது வயதில் தமிழ் நூல்களைக் கற்க ஆரம்பித்து அவற்றால் ஈர்க்கப்பட்டு தமிழ் ஆய்வாளராகவும் நூலாசிரியராகவும் பரிணமித்துள்ளார்.
ஐரோப்பா- இந்தியா-இலங்கை ஆகிய இடங்களைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள் தமிழ் மக்களுக்கும். தமிழ் மொழிக்கும் சிறப்பான தொண்டாற்றியுள்ளனர்.
ஐரோப்பிய கிறிஸ்தவத் தொண்டர்களில் பலர் மதம் பரப்பும் நோக்கோடுதான் வந்தனர். மத நோக்கங்களுக்காகத் தமிழைக் கற்றபோது தமிழில் உள்ள சிறப்பான இலக்கியங்களால் அவர்கள் கவரப்பட்டனர். தமிழ் மொழியின் தன்னிகரில்லாத் தன்மையை அதன் பெருமையை சிறப்பைப் புரிந்துகொண்டு தமிழ் மொழியின் இலக்கியங்களை உலகுக்கு வெளிப்படுத்த முயன்றனர். இந்நூலை வாசிப்பவர்கள் இந்த ஐந்து தமிழ்ச் சான்றோர்களைப்பற்றி விரிவாக அறிந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. மதம் என்ற வகையில் கிறிஸ்தவம் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பை அறிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இந்நூல் அமைந்துள்ளது.
இச்சான்றோர்களின் வாழ்வும் பணியும் நமது வாழ்க்கை நிலைக்கேற்ப நமக்குச் சில வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றது. நமது தமிழ்ப் பணியில் நம்மை உந்தித்தள்ளி ஊக்குவிப்பதாகவும் உள்ளது.
“கிறிஸ்தவர்களின் தமிழ்க் கொடை - தமிழியற் சான்றோர் - பகுதி 2-3” என்ற நூல்வெளியீடு---அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார்...படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
March 10, 2017
Rating:
No comments:
Post a Comment