அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட மதுவரி நிலைய தலைமைக்காரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.Photos

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட மன்னார் மதுவரி நிலைய தலைமைக்காரியாலயம் இன்று (30) வியாழக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் புகையிரத வீதியில் அமைக்கப்பட்ட குறித்த அலுவலகம் மன்னார் மதுவரி நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்பு விழா நிகழ்வின் போது மதுவரி திணைக்கள தலைமையக மேலதிக ஆணையாளர் நாயகம் ஏ.போதரகம வினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது மது வரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் வசந்த திஸாநாயக்க,மது வரி திணைக்கள நிர்வாக ஆணையாளர் காமினி மா கமகே,பிரதேசச் செயலாளர்கள்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மது வரி திணைக்கள அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட மதுவரி நிலைய தலைமைக்காரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.Photos Reviewed by NEWMANNAR on March 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.