அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மீனவர்களுக்கு ஒரு தொகுதி மீன்பிடி வலைகளை வழங்கி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.(படம்)



மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் நேற்று செவ்வாய்க்கிழமை(7) மாலை தனது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்துள்ளார்.

-மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மீன் மற்றும் நண்டு போன்ற கடல் உணவுகளை பிடிக்கும் வலைத்தொகுதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சவேரியார்புரம், மாளிகைப்பிட்டி , பேசலை , தலைமன்னார்  பியர் , தாழ்வுபாடு , வங்காலை  போன்ற கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு குறித்த வலைத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வறிய மீனவர்களின்; வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் வழங்கப்பட்ட இவ் மீன் பிடி வலைத்தொகுதிகள்  பொருட்களானது இனம் மதம் மொழி வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனுடன் இணைந்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களும் கலந்து கொண்டு பயணாளிகளுக்கு வலைகள் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

 







மன்னார் மீனவர்களுக்கு ஒரு தொகுதி மீன்பிடி வலைகளை வழங்கி வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.(படம்) Reviewed by Author on March 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.