அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் திருக்கேதீஸ்வரம்'சிவபுரம்'கிராமத்தில் கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு-(படங்கள் )

யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள திருக்கேதீஸ்வரம் 'சிவபுரம்' கிராமத்தில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு மக்கள் வங்கியின் இந்து மாமன்றத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபம் இன்று(1) சனிக்கிழமை காலை 11 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கலாச்சார மண்டபத்தினை மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும்,இந்து மாமன்றத்தின் தலைவருமான நா.வசந்தகுமார் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,உதவி பிரதேசச் செயலாளர் ஆகியோர் இணைந்து குறித்த கலாச்சார மண்டபத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

இதன் போது வடக்கு, கிழக்கு மாகாணங்கயில் உள்ள மக்கள் வங்கியின் முகாமையாளர்கள், திருக்கேதீச்சர ஆலய நிர்வாகத்தினர், இந்து மத குருக்கள்,கிராம அலுவலர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-மன்னார் நிருபர்-
(01-04-2017)













மன்னார் திருக்கேதீஸ்வரம்'சிவபுரம்'கிராமத்தில் கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on April 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.