அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் மேற்கு மக்கள் கல்வாரித் திருத்தலம் நோக்கி யாத்திரை

தலைமன்னார் மேற்கு மக்கள் 02.04.2017 அன்று காலை 06.30 மணியளவில் தமது யாத்திரையை ஆரம்பித்தனர்.

தொடர்ந்து அன்று காலைத் திருப்பலியை மடு மாதாவின் ஆரம்ப கால இருப்பிடமாகிய மாந்தையில்

திருப்பலியில் பங்குகொண்டு மீண்டும் மடு நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர். அங்கு மருதமடு தாயாரின்

ஆசீரைப் பெற்று தமது பயணத்தை கோமரசங்குளம் கல்வாரி திருத்தளம் நோக்கி பயணமாகினர்.

அன்று மதியம் 1மணியளவில் திருத்தளத்தில் உள்ள யேசுவின் பாடுகளின் காட்சிகளில் ஒவ்வொரு நிலைகளிலும்

தமது சிலுவைப்பாதை வழிபாட்டினை மேற்கொண்டு இறைமகன் யேசுவின் பாடுகள் மரணத்தை சிந்தித்தவர்களாக கல்வாரி

மலையினை அடைந்து அங்கு கிறிஸ்துவின் கல்லரையிலும் ஆசீர் பெற்று தமது குடும்பங்களுடன் மீண்டும்

தலைமன்னார் மேற்கு நோக்கி பயணமாகி திருப் பயணத்தினை இரவு 08.30 மணியளவில் முடித்துக் கொண்டனர்.


தலைமன்னார் மேற்கு மக்கள் கல்வாரித் திருத்தலம் நோக்கி யாத்திரை Reviewed by NEWMANNAR on April 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.