அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புனித பாத்திமா அன்னையின் 100வது காட்சி தந்த திருவிழா மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது....

மன்னார்  மவட்டத்தில்  புனித பாத்திமா அன்னையின் 100 வது  காட்சி  தந்த திருவிழா  மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக 07-05-2017 செபமாலை திருச்சுருபபவனி மன்னார் புனித செபஸ்தியார் பேராலாயத்தில் இருந்து எமில்நகர்  முதலாம் வீதியூடாக சாந்திபுரம்  செல்லும் உள்ளக பிரதான வீதியூடாக  சென்று ஜிம்றோன் நகர் இருதயாஅண்டவர் ஆலயத்தின் அருகாமையில் உள்ள திறந்த வெளியரங்கில் செபமாலைப்பவனி நிறைவுபெற்று சிறப்பு திருப்பலியும் நல்லாயன் ஞாயிறு வாரமும் அனுஸ்ரிக்கப்பட்டது.

 தூய பாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் நாட்டின் பாத்திமா நகரில் 1917 மே 13 முதல் 1917 அக்டோபர் 13 வரை லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த காட்சிகளில் சிறப்பு வாய்ந்ததாக பாத்திமா நகர் காட்சியும் விளங்குகிறது. இரண்டாம் உலகப் போர், ரஷ்ய நாட்டின் மனமாற்றம் ஆகியவை பற்றி பாத்திமா அன்னை வழங்கிய முன்னறிவிப்புகள் அப்படியே பலித்ததால், பாத்திமா காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது.பாத்திமா அன்னையின் திருவிழா மே 13ந்தேதி கொண்டாடப்படுகிறது,

 தொடர்ச்சியாக அந்த 03 சிறார்களுக்கும் 06 மாதமும் 13ம்  திகதி 06 தடவை காட்சிகொடுத்து தொடர்ச்சியாக செபியுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார் .அன்னையின் 06றாவது காட்சிகொடுக்கும் போது அங்கு 70000 மக்கள் கூடியிருக்கும் போது வெளிப்படுத்திய  விசேட காட்சியாக அன்னையின் மூன்று காட்சிகள்
  • சூரியன் நடனமாடும் காட்சி
  • இயேசுகிறிஸ்த்துவின் காட்சி
  • புனித ஜோசப்பின் காட்சி
மூலம் அன்னையானவளின் அன்பு கருணை நம்பிக்கை யின் மூலம் தொடர்ச்சியாக செபிக்கவேண்டும் என்பது வெளிப்பாடு...புனித பாத்திமா அன்னையின் காட்சிப்பெருவிழாவானது 13-05-917--13-05-2017  100 ஆண்டு இம்முறையும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
மன்னார் மறைமாவட்டப்பங்கின்  ஒவ்வொரு வலையமும் செபமாலைப்பவனியும் திருப்பலியும் இடம்பெற்று இறுதியாக 13-05-2017 அன்று புனித செபஸ்தியார் பேராலயத்தில்
புனித பாத்திமா அன்னையின் 100 வது  ஆண்டு காட்சி  தந்த விழா  மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.


















 
மன்னாரில் புனித பாத்திமா அன்னையின் 100வது காட்சி தந்த திருவிழா மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.... Reviewed by Author on May 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.