அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பெரிய கருஸல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படம்


மன்னார் பெரிய கருஸல் கிராமத்தில் அமைக்கப்பட்ட 'மன்னார் அலாவுதீன் அரசினர் முஸ்ஸீம் கலவன்' பாடசாலையை இன்று (8) திங்கட்கிழமை காலை அமைச்சர் றிஸாட் பதியுதீன் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

தேசமான்ய எஸ்.கே.பி.அவாவுதீன் அவர்களின் நிதி ஒதுக்கிட்டில் அமைக்கப்பட்ட குறித்த பாடசாலை திறப்பு விழா நிகழ்வு பாடசாலை அதிபர் என்.எம்.சுஜப் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது குறித்த பாடடசாலையினை அமைச்சர் றிஸாட் பதியுதீனுடன் இணைந்து மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியான்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,உயர்மட்ட அதிகாரிகள் மாணவர்கள்,பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த பாடசாலையில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையிலான கற்றல் நடவடிக்கைகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.












மன்னார் பெரிய கருஸல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படம் Reviewed by NEWMANNAR on May 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.