அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமில்நகர் புனித பூண்டி அன்னை ஆலயக்கொடியேற்றம்.........


மன்னார் எமில்நகரில் குடிகொண்டிருக்கும் புனித பூண்டி அன்னை ஆலயகொடியேற்றம் இன்று வியாழக்கிழமை 11-05-2017 மாலை 5-30 மணியளவில் மன்னார் பேராலய பங்குத்தந்தை பெப்பி சோசை அவர்களுடன் துணைப்பங்குத்தந்தை அருட்சகோதரிகள் பங்குமக்கள் பொதுநிலையினர் படைசூழ கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

இன்று தொடங்கி 09 நவநாட்களில் நற்கருணை ஆராதனையும் திருப்பலியும் இடம் பெறுவதோடு  20-05-2017 திருவிழாத்திருப்பலி இடம்பெறும்.

இன்றைய திருப்பலியானது சிறப்பாக சிறுவர்களிற்காக சிறுவர்களின் ஞானவிளக்கான புனித பூண்டி அன்னையிடம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியாகவும் இலங்கை புனிதர் ஜோசப்வாஸ் அவர்களின் நம்பிக்கை விசுவாசம் செயல்திறன்  போன்றவற்றை சிறுவர்கள் எவ்வாறு தமது வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்தது.











மன்னார் எமில்நகர் புனித பூண்டி அன்னை ஆலயக்கொடியேற்றம்......... Reviewed by Author on May 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.