இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளைக்கான புதிய தலைவராக மீண்டும் ஜே.ஜே.கெனடி போட்டி இன்றி தெரிவு.(படம்)
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளைக்கான இவ்வருடத்திற்கான (2017) புதிய நிர்வாக சபை தேர்தல் இடம் பெற்ற போது தலைவராக முன்னாள் தலைவராக கடமையாற்றிய ஜே.ஜே.கெனடி போட்டி இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் வருடாந்த பொது சபைக்கூட்டமும்,புதிய நிர்வாக சபை தெரிவும் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையில், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் முன்னாள் தலைவர் ஜே.ஜே.கெனடி தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது வருடாந்த பொது சபைக்கூட்டத்திற்கு விருந்தினர்களாக சர்வமதத்தலைவர்கள்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, செந்தில் நாதன் மயூரன், றிப்கான் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,மற்றும் வைத்தியர்கள்,இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை உறுப்பினர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் வருடாந்த பொது சபைக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் இவ்வருடத்திற்கான (2017) புதிய நிர்வாக சபை தேர்தல் இடம் பெற்றது.
இதன் போது இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் புதிய தலைவராக மீண்டும் ஜே.ஜே.கெனடி போட்டி இன்றி மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.அதே வேளை உப தலைவராக ரெஜி ஜெயபாலன்,செயலாளராக கே.ரகு சங்கர்,பொருளாளராக அன்ரன் நிமால் ஆகியோரும் போட்டி இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
-மேலும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்களாக பி.மிதுனன்,அருட்தந்தை லக்ஸன் டி சில்வா,கே.கந்தசாமி,ஏ.சி.முஹமட் பசில்,பாஸ்டர் பத்திநாதன்,ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளைக்கான புதிய தலைவராக மீண்டும் ஜே.ஜே.கெனடி போட்டி இன்றி தெரிவு.(படம்)
Reviewed by NEWMANNAR
on
May 21, 2017
Rating:
No comments:
Post a Comment