அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமில் நகரில் குடிகொண்டிருக்கும் புனித பூண்டி அன்னை ஆலய திருவிழா....படங்கள் இணைப்பு

மன்னார் எமில் நகரில் குடிகொண்டிருக்கும் புனித பூண்டி அன்னை ஆலயகொடியேற்றம்  வியாழக்கிழமை 11-05-2017 மாலை 5-30 மணியளவில் மன்னார் பேராலய பங்குத்தந்தை பெப்பி சோசை அவர்களுடன் துணைப்பங்குத்தந்தை அருட்சகோதரிகள் பங்குமக்கள் பொதுநிலையினர் படைசூழ கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

ன்று தொடங்கி 09 நவநாட்களில் நற்கருணை ஆராதனையும் திருப்பலியும் இடம் பெறுவதோடு  20-05-2017 திருவிழாத்திருப்பலி இன்று சனிக்கிழமை காலை 6-30 மணியளவில் மன்னார் பேராலய பங்குத்தந்தை பெப்பி சோசை அவர்களின் தலைமையில்
  • அருட்பணி பீற்றர் 
  • அருட்சகோதரர்.மரிய கிளைன் 
  • அருட்பணி அமல்ராஜ் 
  • அருட்பணி அரோக்கியம் 
தந்தையர்களுடன் இணைந்து கூட்டுத்திருப்பலியாகா சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இன்றைய திருப்பலியானது சிறப்பாக புனித பூண்டி அன்னையிடம்காணப்பட்ட அன்பு இரக்கம் தாழ்ச்சி நம்பிக்கை விசுவாசம் போன்ற இறைக்கொடைகளை  எமது வாழ்விலும் மேற்கொண்டு மகிழ்ச்சியாக இறைவழியில் இறைமக்களாக விசுவாசத்துடன்  எவ்வாறு தமது வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்தது.
 



















































மன்னார் எமில் நகரில் குடிகொண்டிருக்கும் புனித பூண்டி அன்னை ஆலய திருவிழா....படங்கள் இணைப்பு Reviewed by Author on May 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.