அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பனங்கட்டுகொட்டு மேற்கில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றின் நிலை....

மன்னார் பனங்கட்டுகொட்டு மேற்கு கடலேரி வீதி  முதலாம் ஒழுங்கையில்(சிறுவர் பூங்கா வீதி) அமைந்துள்ள சிறுவர் பூங்காவானது மிகவும் மோசமான நிலையில் பற்றைகள் வளர்ந்து காடாய் காட்சியளிக்கின்றது.

சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற நிலையில் இல்லை அங்குள்ள உபகரணங்களும் உடைக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன வேடிக்கையென்றால் சுற்றிவர சிறுவர்கள் உள்ள வீடுகள் அதிகம் இருக்கின்றது அத்தோடு இளைஞர்களும் உள்ளார்கள் ஏன் இந்தப்பூங்காவனது சிறுவர்களினதும் இளைஞர்களினதும் கண்களில் படவில்லையா…?
அங்கு குடியிருக்கும் பெரியவர்களின் கண்ணில் படவில்லையா….?
இல்லையென்றால் துள்ளிக்குதிக்க தெரிகின்றது…கிடைத்துவிட்டால் ஏனோ... தானோ.... என்றிருப்பது இது முறையா….?
எந்த நிறுவனம் கட்டித்தந்தாலும் அதை ஒழுங்காகப்பாவிக்கவேண்டும் அல்லவா…பாதுகாக்கவேண்டும் அல்லவா…இருப்பதையும் கிடைத்ததையும் அழியவிட்டுபின் யாரிடம் கேட்கப்போகின்றீர்கள்….

சமூக அக்கறையுள்ள 
மாதர்சங்கம் இல்லையா…..?
இளைஞர் அமைப்புக்கள் இல்லையா….?
பொதுநலனுடன் சிந்திப்பவர்கள் இல்லையா…?


கண்டதை இங்கு தருகின்றோம் காணாத பிரச்சினைகள் இன்னும் இருக்கும் அது உங்களுக்குத்தான் தெரியும்.
 இருப்பதை இல்லாமல் போகும் முன் காப்போம்…..முன்வாருங்கள் நமக்கென்ன என்று இராமல் பிரச்சினைகளை வெளிப்படுத்தி அதற்கான தீர்வுகளை காண்போம்…

சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் அமைப்புகள் பிரதிநிதிகள் மன்னார் நகரசபை இவ்விடையத்தினை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு சிறுவர்கள் விளையாடும் சிறுவர் பூங்காவாக மாற்றியமைக்க வேண்டும்மென நியூ மன்னார்  கேட்டு நிற்கின்றோம்…..

குறைகளை நிறைகளாக்குவோம்……முறையாக ...........


மன்னார் பனங்கட்டுகொட்டு மேற்கில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றின் நிலை.... Reviewed by Author on June 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.