அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதியின் சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளுவது குறித்து விசேட கலந்துரையாடல்-

ஜனாதிபதியின் கனவான சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 'மறுமலர்ச்சி' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று(14) வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் சார்பில் ஜனாதிபதியின் வன்னி மாவட்ட கருத்திட்டப் பணிப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், சுற்றாடல் தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் டாக்டர் உபாலி இந்திர சிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், மன்னார்,நானாட்டான்,முசலி,மடு ஆகிய பிரதேசச் செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள்,பொலிஸ் அதிகாரி,சுகாதார சேவைகள் பணிப்பாளர்,விவசாய திணைக்கள அதிகாரிகள்,சிறுவர் பாதுகாப்பு பிரிவு உற்பட திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் உணவு உற்பத்தி,சிறுவர் பாதுகாப்பு,சுற்றாடல் பாதுகாப்பு, சிறுநீரக நோய்த்தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு போன்ற 5 தேசிய வேலைத்திட்டங்களை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளுவது குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதோடு மக்களுக்கு விழிர்ப்புனர்வை ஏற்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதியின் சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளுவது குறித்து விசேட கலந்துரையாடல்- Reviewed by NEWMANNAR on July 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.