நீதிபதி மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து மன்னாரில் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்
யாழ்; மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த நீதி கோரிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.
வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு,கிழக்கு மாகாணங்கயில் யாழ்; மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்தும்,குறித்த சம்பவத்திற்கு நீதி கோரியும் இன்று(25) செவ்வாய்க்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(25) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதி நிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மாதர் ஒன்றிய பிரதி நிதிகள்,மன்னார் சமாதான அமைப்பின் பிரதி நிதிகள், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம் பெற்றதோடு,கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.
குறிப்பாக நீதித்துறைக்கே நீதி இல்லையாயின் உரிமை கோரும் மக்களின் தீர்வுக்கு நீதி யாரிடம்,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுரூத்தல்களை நிறுத்து, ஜனாதிபதி அவர்களே இலங்கையில் நீதித்துறையை பாதுகாக்க உனடியாக நடவடிக்கை எடுங்கள்,நல்லாட்சிக்கு சவாலா?நீதித்துறைக்கு சவாலா?,நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடாதே,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் மன்னாரில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு,கிழக்கு மாகாணங்கயில் யாழ்; மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்தும்,குறித்த சம்பவத்திற்கு நீதி கோரியும் இன்று(25) செவ்வாய்க்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(25) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதி நிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள்,மாதர் ஒன்றிய பிரதி நிதிகள்,மன்னார் சமாதான அமைப்பின் பிரதி நிதிகள், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம் பெற்றதோடு,கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.
குறிப்பாக நீதித்துறைக்கே நீதி இல்லையாயின் உரிமை கோரும் மக்களின் தீர்வுக்கு நீதி யாரிடம்,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுரூத்தல்களை நிறுத்து, ஜனாதிபதி அவர்களே இலங்கையில் நீதித்துறையை பாதுகாக்க உனடியாக நடவடிக்கை எடுங்கள்,நல்லாட்சிக்கு சவாலா?நீதித்துறைக்கு சவாலா?,நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடாதே,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் மன்னாரில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நீதிபதி மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து மன்னாரில் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
July 25, 2017
Rating:
No comments:
Post a Comment