அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதுறித்து உயர் மட்ட கலந்துரையாடல். (படம்) கு


மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கும் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை(28) காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.

குறித்த விசேட கலந்துரையாடலில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள், கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்டத்தின் பிரதேசச் செயலாளர்கள் உற்பட ஏனைய திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தலை மன்னார் தொடக்கம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சிக்கட்டி வரையும், விடத்தல் தீவு தொடக்கம் மடு வரைக்கும் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திகளை மேற்கொள்ளுவதற்கும் குறிப்பாக மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினர் தங்குவதற்கு சுமார் 400 அறைகளை உள்ளடக்கிய திட்டங்களை மேற்கொள்ளுவதற்கும் திட்டமிடப்பட்டது.

மேலும் சுற்றுலாத்துறையினரின் பொழுது போக்கு, பறவைகள் சரணாலையமாக வர்த்தமானி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள இடங்களில் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பறவைகளை சுற்றுலாத்துறையினர் பார்வையிடுவதற்கான அழகான பிரிதேசங்கள் உள்ளது.இந்த நிலையில் குறித்த பிரதேசங்களில் பல வகையான அபிவிருத்திகளை சுற்றுலாத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளுவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சுற்றுலாத்துறையினை மேம்படுத்தி மாவட்டத்தில் தொழில் வய்ப்புக்களையும் மேம்படுத்தவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதுறித்து உயர் மட்ட கலந்துரையாடல். (படம்) கு Reviewed by NEWMANNAR on August 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.